Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல்லில் 6 நாட்கள் உயிர் பூச்சி, பூஞ்சாண கொல்லிகள் உற்பத்தி பயிற்சி

நவம்பர் 01, 2023 08:41

நாமக்கல்: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், கிராமப்புற இளைஞர்களுக்கான எதிர் உயிர் பூச்சி மற்றும் பூஞ்சாணக் கொல்லிகள் உற்பத்தி பற்றிய திறன் மேம்பாட்டு இலவச பயிற்சி 6 நாட்கள் நடைபெறுகிறது.

நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள, வேளாண் அறிவியல் நிலையத்தில், கிராமப்புற இளைஞர்களுக்கான எதிர் உயிர் பூச்சி மற்றும் பூஞ்சாணக் கொல்லிகள் உற்பத்தி பற்றிய திறன் குறித்த, இலவச மேம்பாட்டு பயிற்சி நவ. 21 முதல் 27 வரை 6 வேலை நாட்கள், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் விவசாயத்திற்கு தேவையான, எதிர் உயிரிகளான இரை விழுங்கி, ஒட்டுண்ணி, பொறிவண்டு மற்றும் எதிர்; உயிர் பூச்சிக் கொல்லிகளான பெவோரி ,வொர்டிசிலியம் மற்றும் மெட்டாரிசம் ஆகியவை உற்பத்தி செய்தல் மற்றும் எதிர் உயிர் பூஞ்சாண மற்றும் பாக்டீரியாக் கொல்லிகளான பேசில்லஸ், டிரைக்கோர் மாவிர்டி, டிஹா; சியானம் ஆகியவற்றை உற்பத்தி செய்ய கிராமப்புற இளைஞர் களுக்கும், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட இளைஞர்களுக்கும் இலவச பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

மேலும் இப்பயிற்சி முடித்த இளைஞர்கள் சுய தொழில் துவங்கிட சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. 

பங்குபெற தகுதியும் விருப்பமும் உள்ள, 18 வயது நிறைந்த இளைஞா;கள் மற்றும் நன்கு படிக்க தெரிந்தவர்கள், குறைந்தது 10 ஆம் வகுப்பு முதல் இளநிலை வரை படித்ததவர்கள் கலந்து கொள்ளலாம்.

அதாவது பட்டய படிப்பு, இளநிலை வேளாண்மை, தோட்டக்கலை, விலங்கியல், தாவரவியல் மற்றும் நுண்ணுயிரியல் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 

இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள இளைஞர்கள் 04286 266345, 9597746373, 9943008802 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளலாம் என வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்